Categories: சினிமா

வசூல்ராஜா படம் உருவாக முக்கிய காரணமே அஜித் தான்.. பல வருடம் கழித்து இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மறுபக்கம் கார் ரேசிலும் கவனம் செலுத்தி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் நிறைவடையாமல் இருந்து வருகிறது. இதற்குப் பிறகு தொடங்கிய குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் சரண் அஜித் குறித்து சில விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் மற்றும் அட்டகாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் சரண். அஜித்தின் ஆசானை இயக்குனர் என்று இவரை கூறலாம்.

இவர் நடிகர் அஜித் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நடிகர் அஜித்தை வைத்து அட்டகாசம் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது தனக்கு கமல்ஹாசன் உடன் இணைந்து வசூல்ராஜா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. வசூல்ராஜா படத்தை உடனடியாக எடுத்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அட்டகாசம் படத்தை எடுப்பதா அல்லது வசூல்ராஜா படத்தை எடுப்பதா என்று நான் குழப்பத்தில் இருந்தேன்.

அப்போது அஜித் தன்னிடம் மிகவும் சந்தோசமாக கமல் சாரோட படம் கிடைக்கிறது எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு, நீங்க முதலில் போய் கமல் சாரோட படத்தை எடுத்து முடிங்க அப்புறம் நம்ம படத்தை பார்த்துக்கலாம், அதுக்குள்ள நானும் வேறு ஒரு படத்துல நடிச்சிட்டு வரேன் அப்படின்னு எனக்கு ஆறுதல் சொன்னாரு. அப்போதுதான் நடிகர் அஜித் கமல் சார் மீது எவ்வளவு பெரிய மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார் என்பதை எனக்கு புரிந்தது என்று சரண் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்…! நடந்து சென்ற பெண்களிடம் வேலையை காட்டிய வாலிபர்கள்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…

27 minutes ago

BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?….. தவெக விரித்த பனையூர் வலை…. திமுகவை அதிர வைக்கும் ரகசிய ரிப்போர்ட்….!

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…

32 minutes ago

“வருங்கால PM விஜய்யா? ராகுல் காந்தியா?”…. காங்கிரஸின் அதிரடி முடிவால் தவெக கூட்டணியில் புயல்…. பரபரப்பில் தமிழக அரசியல்…!

எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…

38 minutes ago

“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…

42 minutes ago

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

48 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

53 minutes ago