CINEMA
“என்னால அதுக்கு மேல நடிக்க முடியாது”.. ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் டைரக்டருக்கு நெருக்கடி கொடுத்த அஜித்..
நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் விடாமுயற்சி படப்பிடிப்பு, இப்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், இப்போது 2வது கட்ட ஷூட்டிங் கடந்த 15 தினங்களாக நடந்து வருகிறது. வரும் 2024ல் பிப்ரவரி மாதம் 2வது வாரம் வரை இந்த ஷூட்டிங்கை தொடர்ந்து 70 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிவிடும். போஸ்ட் புரடக்சன் பணிகளை அடுத்து படம் வெளியீடு தேதி முறையாக அறிவிக்கப்படும். அஜீத் பிறந்த தினமும், உழைப்பாளர் தினமுமான வரும் மே 1ம் தேதி விடாமுயற்சி படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துவரும் நிலையில், குளிர்பிரதேசம் என்பதால் மாலை 5,6 மணிக்கெல்லாம் இருட்டு சூழ்ந்துவிடுகிறது. ஏனெனில் இதுபோன்ற நாடுகளில் பகல் வேளைகளில் குறைந்த நேரமே சூரியவெளிச்சம் இருக்கும். பின்னர் குளிரத் துவங்கிவிடும். அதனால் படப்பிடிப்பை மாலை 5 அல்லது 6 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு படத்தின் ஹீரோ அஜீத்குமார், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நெருக்கடி தந்து வருவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது குளிர்பிரதேச நாடுகள், வெளிநாடுகளுக்கு தமிழ் சினிமாவினர் ஷூட்டிங் சென்றால் வழக்கமாக இரவு நேரங்களில் மதுபானம் அருந்துவது வழக்கம். ஏனெனில் குளிரை சமாளித்தாக வேண்டும். தவிர, வௌிநாடு என்பதால் அதுவும் ஒரு உற்சாகம் தரும் ஒரு பானமாக இருக்கும் என்பதால்தான். ஆனால் அசைவம் சாப்பிடுவது, இதுபோன்ற போதை என அனைத்தையும் கைவிட்டுவிட்ட அஜீத்குமார்,
குளிரை சமாளிக்க முடியாமல் மாலை 6 மணிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிடுங்கள் என இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை அவசரப்படுத்தி நெருக்கடி தருகிறார். இது படக்குழுவினரை பயங்கர அப்செட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் இல்லை என்றாலும், லைட்டிங் மூலம் படப்பிடிப்பை நடத்தி விட முடியும். ஆனால், குளிர் அதிகமாக உள்ளது என படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க சொன்னால், எப்படி முடிப்பது என படக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.