தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து இன்று சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் அஜித்குமார். சிறு வயதிலிருந்து அஜித்குமாருக்கு கார் ரேசிங்கில் ஆர்வம் உண்டு.
தனது 18 வது வயதில் இருந்து கார் ரேசிங்கில் பங்குபெற்று வருகிறார் அஜித்குமார். அதே சமயத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் 1990 களில் நாயகனாக அறிமுகமான அஜித்குமார் காதல் மன்னன், வாலி, போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பில்லா, மங்காத்தா, விசுவாசம் போன்ற பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் அஜித்குமார்.
தற்போது அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் GoodBadUgly ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அஜித்குமார் துபாய் கார் ரேசிங்கில் கலந்து கொள்ளப் போவதாக இவரது அணி அதில் பங்கேற்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற துபாய் 24H 991 கேட்டகரியில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து துபாய் Autodrome In Cheif இம்ரான் அவர்கள் அஜித்குமாரை புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், அஜித் குமார் செய்த சாதனை மிகப் பெரியது. அவர் ஒரு அருமையான மனிதர் கடினமாக உழைக்கக் கூடியவர். அவரைச் சேர்ந்த அவரது குடும்பம் நண்பர்கள் எல்லோருமே மிகவும் பாசிட்டிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் என்றைக்கும் அஜித்குமாரை விட்டு விடாதீர்கள். அசாத்தியமான செயல்களை செய்யக்கூடியவர் அஜித்குமார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…