பிரபல நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று கெருகம்பாக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து தான் அவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
பிரபல நடிகர் அர்ஜுன் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். அர்ஜுன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யாவும் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் ஐஸ்வர்யா நடித்தார். இந்நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடியனான தம்பி ராமையாவின் மகன் உமாபதி போட்டியாளராக பங்கேற்றார்.
அப்போது தந்தையை பார்க்க வந்த ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே நட்பு மலர்ந்து பின் காதலாக மாறியது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்த திருமணத்தில் நடிகர் விஷால், விஜயகுமார், கே ஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா, உமாபதி திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title