இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேரி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தற்போது ஆன்லைன் மோசடி என்பது அதிகமாகவே உள்ளது. போலியான போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக மோசடிகள் அதிகரித்துவிட்டது.
இப்படியான நிலையில் ஆன்லைன் மோசடியாளர்கள் தற்போது மிகவும் ஸ்மார்ட் ஆக செயல்படுகின்றனர். ஏர்டெல்லின் புதிய மோசடி தடுப்பு அமைப்பு உங்களின் whatsapp, instagram, SMS, இமெயில் மூலம் வரும் ஆபத்தான லிங்குகளை 100 ml செகண்ட் நேரத்தில் தடுத்துவிடும். தனி ஆப், செட்டிங்ஸ் தேவையில்லை. தானாகவே இது வேலை செய்யும். அனைத்து பயனர்களுக்கும் இது இலவசம். ஏற்கனவே மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மோசடிகளை ஏர்டெல்லின் இந்த AI சேவை தடுத்து நிறுத்தியுள்ளது.
