இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டார்கள். 41 வருடங்களுக்கு பின், விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது ட்ராகன் விண்கலம்.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் இந்த விண்கலத்தில் பயணித்து சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியரானார் சுபான்ஷு சுக்லா
