தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, சாத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்து பேசியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதி கூட்டணி கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதால், திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு ராஜவர்மன் தோல்வியடைந்தார்.
இதனால் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், அண்மையில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளதன் மூலம், தான் தவெக-வில் இணையப் போவதாக வெளியான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, தான் என்றும் அதிமுக-விலேயே நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…
வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…