தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தமது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் எம்.எல்.ஏ பதவியை துறந்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனிடையே, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், கொறடா உத்தரவை மீறியதாக எடப்பாடி தரப்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. பின்னர் இருதரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் இருந்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆகஸ்ட் 05) தொடங்கியது. அவை தொடங்குவதற்கு முன்பாக பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். உள் கட்சிப் பூசல் காரணமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை எஸ்.பி.வேலுமணியும் சி.வி.சண்முகமும் புறக்கணித்த போதிலும், அதன்பின் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளில் இருவரும் வழக்கம்போல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…