மகாராஷ்டிராவின் அதாச்சிவாடிகிராமம், நவீன வசதிகளுடன் ஒரு ‘ஃபியூச்சரிஸ்டிக்’ கிராமமாக உருவெடுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வகையில் இங்கு கூகுள் மேப் மூலம் குப்பைத் தொட்டிகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் வசதி, கார்டு மூலம் இயங்கும் வாட்டர் ஏடிஎம் மற்றும் வெறும் ₹300 கட்டணத்தில் உடற்பயிற்சிக் கூடம் போன்றவை உள்ளன.
100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் கிராமம் முழுவதும் வைஃபை வசதி எனப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இக்கிராமம் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் டேப்லெட் மூலம் கல்வி பயில்வதோடு, இரவு நேரச் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மக்களின் கூட்டு முயற்சியால் உருவான இந்தத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கிராமத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
