CINEMA
நான் கர்ப்பமாக இருந்தேன் ; தெரிஞ்சதும் ரஜினி சார் பதறிட்டார்… முதல்முறையாக ரகசியம் பகிர்ந்த நடிகை ஒய்.விஜயா
70, 80களில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 700க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் தான் நடிகை ஒய்.விஜயா. வாணி ராணி என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் கதாநாயகியாக, வில்லியாக, குணசித்திர நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ரஜினி என பெரிய ஆளுமைகளுடன் இவர் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல என்.டி.ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் உள்பட தெலுங்கு சினிமாவின் பெரிய நடிகர்களுடன் இவர் நடித்து பிரபலமானவர். குறிப்பாக கமலுடன் இவர் இனைந்து நடித்த ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடம் இன்றளவும் மக்களிடத்தில் பேமஸாக உள்ளது. பழம்பெரும் நடிகையான இவர், தன்னுடைய சினிமா பயணத்தில் நடந்த சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது, கமல் ரஜினி என்னுடன் மிக அன்பாக பழகுவார்கள். ஆறு புஷ்பங்கள் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நான் நடித்தேன். அதன்பின் பைரவி, நல்லவனுக்கு நல்லவன், தனிக்காட்டு ராஜா, ராஜாதி ராஜா படங்களில் அவருடன் நடித்துள்ளேன். அப்படி எனக்கு திருமணமான சமயத்தில் ரஜினி என்னை தேடி வந்து, எனக்கு வாழ்த்து சொன்னார். என்னால் இன்றும் அதை மறக்க முடியாது.
அதேபோல் ராஜாதி ராஜா படம் ஆரம்பிக்கும்போது நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தேன், யாருக்கும் சொல்லவே இல்லை. ஷூட்டிங் பல மாதங்கள் நடந்தது. அப்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது. ரஜினியோ விஷயம் தெரிந்து பதறி போய்விட்டார், ஏன் மா முதலே சொல்லவில்லை என கேட்டு என்னை அன்பாக பார்த்து கொண்டார். அடிக்கடி வந்து நான் சாப்பிட்டேனா இல்லையா என விசாரிப்பார்.
அந்த படத்தின் க்ளைமாக்ஸ் நடக்கும்போது எனக்கு எட்டு மாதம், ஷூட்டிங்கோ ஒரு மலை மீது. ரஜினி வந்து என்னை டோலியில் வைத்து தூக்கி செல்வோம் என்றார், நான் தான் பரவாயில்லை என கூறி நடந்தே சென்றேன். என் டீமோ என்னை கடிந்துகொண்டார், மலை மீது ஏறிய பின் சுந்தர்ராஜன் சொல்கிறார், இந்த மலை இல்லை பக்கத்துக்கு மலையில் தான் ஷூட்டிங் என்று. மீண்டும், இறங்கி ஏறி ஷூட்டிங் செய்து வந்தோம், ஆனால் ரஜினி சார் என்னை அன்பாக பார்த்து கொண்டதை இன்னும் என்னால் மறக்க முடியாது என கூறினார் நடிகை ஒய்.விஜயா.