“சினிமாவை மிஞ்சிய க்ரைம் த்ரில்லர்”…. நடிகையின் கள்ளக்காதலன் கொலை.. இப்போது தந்தையும் படுகொலை… கொடைக்கானலை அதிரவைத்த ‘ட்விஸ்ட்’….!

Spread the love

நடிகை விஷ்ணு பிரியா தொடர்பான சர்ச்சைக்குரிய பின்னணியில், அவரது தந்தை சூர்ய நாராயணன் கொடைக்கானலில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த இவர், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதியில் உள்ள தனது சொந்த பங்களாவில் தங்கியிருந்தபோது, உடல் முழுவதும் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு நீண்டகாலப் பகை இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை விஷ்ணு பிரியா, கடந்த 2018-ம் ஆண்டு தனது கணவரின் சிகிச்சைக்காகத் தந்தையுடன் கொடைக்கானலில் தங்கியிருந்தார். அப்போது அவர்களது கார் டிரைவராகப் பணியாற்றிய பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்குத் திருமணத்தைத் மீறிய உறவு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தந்தை சூர்ய நாராயணன் கடுமையாகக் கண்டித்தும் அவர்கள் உறவு தொடர்ந்ததாகத் தெரிகிறது.

இதற்கிடையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கார் டிரைவர் பிரபாகரன் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். மகளின் தவறான உறவைத் தடுக்க சூர்ய நாராயணனே கூலிப்படையை ஏவி பிரபாகரனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர் சிறைக்கும் சென்றார். ஜாமீனில் வெளிவந்து கொடைக்கானல் பங்களாவிலேயே தங்கியிருந்த அவரை, தற்போது ஒரு கும்பல் திட்டமிட்டுப் பழிதீர்த்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோயம்புத்தூரிலிருந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், அங்குள்ள சிசிடிவி ஆதாரங்களை அழித்துவிட்டு இக்கொலையைச் செய்துள்ளது. டிரைவர் பிரபாகரன் கொலைக்குப் பழிவாங்கவே இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நடிகையின் கள்ளக்காதல் விவகாரத்தில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago