“பால் பப்பாளி வெள்ள தக்காளி”.. சட்டையை கழட்டி சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் வாணி போஜன்..!

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவிய பல நடிகைகள் ஓரிரு படங்களிலேயே சொந்த ஊருக்கு நடையை கட்டி விடுவார்கள். இல்லையென்றால் மீண்டும் சீரியல் பக்கம் கரை ஒதுங்குவார்கள். ஆனால் தரமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. அப்படிப்பட்ட நடிகை தான் வாணி போஜன். 36 வயதாகும் இவர் ஊட்டியில் பிறந்தவர். தன்னுடைய சொந்த ஊரில் உள்ள கவர்மெண்ட் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி ஏ இங்கிலீஷ் பாடத்தை தேர்வு செய்து படித்து பட்டம் பெற்றவர்.

   

தன்னுடைய தந்தை ஒரு வைல்ட் லைஃப் போட்டோகிராபர் என்பதால் சிறுவயதில் இருந்தே புகைப்படங்கள் மற்றும் நடிப்பின் மீது வாணி போஜன் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும் ஹேர் ஹோஸ்ட்ரஸ் ட்ரைனிங் முடித்த இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ விமானத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது இவருக்கு வெறும் 2500 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது.

   

 

இதனைத் தொடர்ந்து தி சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு தெரிந்தவர்கள் மூலம் திரைப்பட வாய்ப்பையும் தேடத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் ஊர் இரவு என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது.

ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் அதிகாரம் 79 என்ற திரைப்படத்தில் நடித்தார். இதுவும் ஒரு கட்டத்தில் கை கொடுக்காமல் போனதால் சீரியல் வாய்ப்புகளை தேடத் தொடங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா, ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா போன்ற சீரியல்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தார். பிறகு சன் டிவியில் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தெய்வமகள் சீரியலில் சத்திய பிரியா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தமிழில் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் வெள்ளித்திரையில் வாணி போஜனுக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இதை தொடர்ந்து இவரை ரசிகர்கள் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்றும் அழைத்து வருகின்றனர். இவர் பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர்க்குருவி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தவிர பல நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். இடையில் இவர் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்த நிலையில், அவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலானது.

ஆனால் இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் நடிகை வாணி போஜன். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.