உங்க புருஷன் வீட்ல இல்லன்னு விஷாலுக்கு எப்படி தெரியும்..? அப்போ நீங்கதான் சொன்னீங்களா..? சுசித்ராவுக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை..!

By Soundarya on ஜனவரி 11, 2025

Spread the love

பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்பாக விஷால் கார்த்திக் குமார் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு கையில் ஒயின் பாட்டிலோடு வந்து கதவைத் தட்டினார் என்று கூறியிருந்தார். இது இணையத்தில் பேசுபொருளான நிலையில் இது குறித்து நடிகை சார்மிளா பதிலடி கொடுத்தார். அதில், விஷால் எப்படி கார்த்திக் இல்லாத நேரத்தில் கையில் ஒயின் பாட்டிலோடு வருவார். சுசித்ரா சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஷால் அழைத்தால் வீட்டிற்கும், அலுவலகத்திற்கு, வெளியில் செல்வதற்கு என பல நடிகைகள் இருக்கும்போது அவர் ஏன் சுசித்ராவை தேடிச் செல்ல வேண்டும்.

   

அது மட்டும் இல்லாமல் சுசித்ராவின் கணவர் வீட்டில் இல்லை என்று விஷாலுக்கு எப்படி தெரியும்? சுசித்ரா போனில் நான் தனியாக இருக்கிறேன். என் புருஷன் வீட்டில் இல்லை என்று சொன்னாரா? அப்படி சொல்லியிருந்தால் தான் விஷால் வீட்டிற்கு சென்றிருப்பார். ஆனால் சுசித்ரா அந்த வீடியோவில் அப்படி சொல்லவே இல்லையே .திடீரென்று வந்தார் என்று தான் விஷால் மீது பழி  போட்டு இருக்கிறார்.

   

 

இன்றைய காலகட்டத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சென்று சரக்கடிப்பது, பார்ட்டி செய்வது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆனால் விஷால் தவறான நோக்கத்தோடு வீட்டுக்கு வந்தார் என்பது சொல்வது நம்பும்படியாக இல்லை. விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள் என்று சாபம் விடுகிறார் சுசித்ரா. சாபம் விடும் அளவிற்கு அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.