தனுஷ் பட நடிகை சரண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!

By Nanthini on சித்திரை 18, 2025

Spread the love

கேரளாவில் பிறந்து வளர்ந்த மலையாள நடிகை சரண்யா மோகன். பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து அறிமுகமான இவர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, ஒருநாள் ஒரு கனவு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார்.

ஈரம் பட சரண்யா மோகனுக்கு இவ்வளவு க்யூட்டான பசங்களா? அம்மாவோட ஜெராக்ஸ்ல  பொண்ணு, வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ் - Cinemapettai

   

அதன்பிறகு வளர்ந்து வேலாயுதம் திரைப்படத்தின் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். மேலும் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவிலும் சரி, மலையாளத்திலும் சரி இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. யாரடி நீ மோகினி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

   

 

இருப்பினும் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மநாபன் என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றார். இவர் மகள் பார்ப்பதற்கு அப்படியே அவரது அம்மா சரண்யா மோகன் போலவே இருக்கின்றார்.

இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ எப்படி இருந்த நடிகை சரண்யா மோகன் இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.