இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் பல படங்களில் சமந்தா நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் பிரபல வெப் சீரியஸ் இயக்குனர் ராஜ் நெடிமூரே என்பவரை கோவை ஈஷா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இப்போது சமந்தா படங்களில் எதுவும் நடிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு எங்கும் நகர விடாமல் செய்தனர். அங்கிருந்து கூட்ட நெருக்கடியில் சிக்கிய சமந்தா அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்து காரில் ஏறுவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. ரசிகர்கள் மத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கி சமந்தா திக்குமுக்காடி விட்டார்.
சமீபத்தில் ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வாலுக்கு இப்படியொரு மோசமான நிலைமை ஏற்பட்டது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இப்போது நடிகை சமந்தாவும் அதே போல் கூட்ட நெரிசலில் ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டது பெரிய அதிர்ச்சியை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
