கடந்த 1937-ஆம் ஆண்டு ரத்தன் டாடா பிறந்தார். இவர் கார்னல் கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த 1961 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் கம்பெனியில் தனது பணியை தொடங்கி 1991 ஆம் ஆண்டு டாடா குடும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றார். பிற தொழிலதிபர்களை போல் சொத்துக்களை சேர்ப்பது, சாம்ராஜ்யத்தை உருவாக்குவது என ஆடம்பரமாக வாழ ரத்தன் டாட்டா விரும்பவில்லை. இவரது தலைமையில் டாட்டா குழுமம் உலகம் முழுவதும் பிரபலமானது.

தனது வருமானத்தில் 60 முதல் 65 சதவீத பங்கை ரத்தன் டாட்டா தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது ரத்தன் டாட்டாவுக்கு 2008-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சுமார் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாட்டா நிறுவனம் பைனான்சியல், மெட்டல், ஆட்டோ மோட்டிவ் கன்சியூமர், ரீடைல் செக்டர், டிராவல், டெலிகாம், ஐடி என அனைத்திலும் வெற்றி கண்டது. இப்படி புகழ் மிக்க இந்தியாவின் பிரபல தொழிலதிபாரான ரத்தன் டாட்டா உடல் நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் ரத்தன் டாடா பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள நடிகை சாய் பல்லவி, கடந்த ரெண்டு வருஷமா எனக்குள்ள ஒரு ஆசை வந்துருச்சு. எப்படியாவது ஒரு நாள் ரத்தன் டாடாவை நேரில் சந்தித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் அவருடைய நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறாமலேயே போய்விட்டது.
