ஈரோடு மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரலையில் உள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் என்பதாலும் செங்கோட்டையன் இணைந்த பிறகு முதல் முறையாக நடைபெறும் கூட்டம் என்பதாலும் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த கூட்டத்தில் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
இந்நிலையில் விஜயின் ஈரோடு பிரச்சாரக் கூட்டம் குறித்து பேசிய நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, விஜயின் ஈரோடு மீட்டிங்கை பார்க்கும்போது உண்மையாகவே எனக்கு ரொம்ப ஷாக் ஆகத்தான் இருந்தது. நாங்க கவர்மெண்ட்ல முதலமைச்சருக்கு ஒரு மாநாட்டில் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால் அதற்கு பல பேர் விடிய விடிய வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த மீட்டிங்கை நடத்த மினிஸ்டர், எம் எல் ஏ, எம் பி, எஸ்பி மற்றும் கலெக்டர் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அந்த மீட்டிங் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்றால் அனைவரும் ஒத்துழைத்தால் தான் பெரிய மீட்டிங் நடத்த முடியும். ஆனால் தமிழக வெற்றி கழகம் கட்சியில் ஆட்கள் இல்லை, பெரிய ஆளு இல்லாத போதும் இவ்வளவு பெரிய மீட்டிங்கை விஜய் எப்படி செஞ்சாரு? சத்தியமா எனக்கு புரியவே இல்ல. மக்கள் விஜய்யிடம் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் சார் அதை தெரிந்து கொண்டு மக்களுக்கு அதை கொடுக்கும்போது தான் மக்கள் ஆதரவு விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும் என்று நடிகை ரோஜா பேசியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…
ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…
திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…
தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…