தமிழ் சினிமாவில் 90களில் டீச்சர் என்றால் ரசிகர்களை நினைவுக்கு வருவது ரேகா தான். சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காவலன் அவன் கோவலன் மற்றும் புன்னகை மன்னன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போதும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இறுதியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார். நடிகை ரேகா கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
தற்போது சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் ரேகா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ரேகா சமீபத்தில் அளித்த youtube பேட்டியில் ரஜினி பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ரஜினியுடன் ஒரு படத்தில் கூட ஹீரோயினியாக நடிக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கு. அதுவும் அவருடைய தற்போதைய படங்களை பார்க்கும் போது ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் ஆவது அவருடன் நடித்தாக வேண்டும் என்ற ஏக்கம் இன்றும் உள்ளது.
ஆனால் ஒருமுறை அவருடன் பேசிய போது சில நாட்களிலேயே அவருடைய காதல் முதல் திருமணம் வரை வாழ்க்கை பற்றிய அனைத்தும் என்னிடம் கூறிவிட்டார். அதே சமயம் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ரேகா நீங்க சினிமாவுல இருக்க வேண்டிய ஆளே இல்ல, ரொம்ப இன்னசென்ட் என்று பேசினார். உடனே நான், ஏன் சார் எனக்கு தகுதி இல்லையான்னு கேட்டேன். இல்லம்மா நான் அப்படி சொல்ல வரல உன்னோட கேரக்டர் வேற மாதிரி இருக்கு நீ சினிமாவுல இருக்க வேண்டிய ஒரு கேரக்டரே இல்ல, ரொம்ப நல்ல பொண்ணு இன்னசென்ட்டா இருக்க என்று கூறினார். ரஜினி எப்பவுமே கிரேட் தான் என்று ரேகா பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…