பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ரக்ஷித் செட்டிக்கு ஜோடியாக நடித்தார். முதல் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் ராஷ்மிகா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
விஜய் தேவர கொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வரும். ஆனால் நாங்கள் காதலிக்கவில்லை என இருவரும் கூறி வருகின்றனர். ஆனால் புஷ்பா -2 ஆடியோ லாஞ்சில் இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டது.தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்தார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஹிந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், டான்ஸ் ஆடும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவார். இந்நிலையில் ராஷ்மிகா காலில் அடிபட்டு வீல் சேரில் சேரும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…