நடிகை ரம்யாவின் பிறந்தநாளுக்கு ரசிகர் செய்த நிகழ்ச்சியான செயல்… இன்ப அதிர்ச்சி அடைந்த ரம்யா… வைரலாகும் புகைப்படம் இதோ….

By Begam

Published on:

நடிகை குத்து ரம்யா தனது 40வது பிறந்தநாளுக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த சர்ப்ரைஸ் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் ‘குத்து’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சிம்புவுக்கு ஹீரோயினியாக நடித்தவர்  திவ்யா ஸ்பந்தனா என்கிற நடிகை ரம்யா. இந்த படத்திற்கு பின்னால் இவரை ‘குத்து ரம்யா’ என்று அழைத்தால் தான் அனைவருக்கும் தெரியும். குத்து ரம்யா அர்ஜுனுடன்  ‘கிரி’ என்ற படத்திலும், தனுஷ் உடன் ‘பொல்லாதவன்’ படத்திலும், சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’ படத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ஜீவா உடன் சேர்ந்து ‘சிங்கம் புலி’ திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் நடிக்கும் பொழுதே அரசியலில் ஈடுபட்ட இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து பார்லிமென்ட் தேர்தலுக்காக போட்டியிட்டார்.

தேர்தல் வெற்றியை தொடர்ந்தவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக எம் பி பொறுப்பில் இருந்து வருகிறார். தற்பொழுது அவர் அரசியலை விட்டும் ஒதுங்கியுள்ளார். இவர் தற்பொழுது ‘உத்தர கன்னடா’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது 40 ஆவது பிறந்த நாளை ஜப்பானில் கொண்டாடினார்.

இதைத்  தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை ரம்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர் ஒருவர் பலரும் திரும்பி பார்க்கும் வண்ணம் கொண்டாடியுள்ளார். அதாவது அவர் மிகப்பெரிய சுவற்றில் 35 அடி உயரத்திற்கு ரம்யாவின் உருவத்தை வரைந்து அவரை மகிழ்ச்சியடைய செய்துள்ளார். பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வருபவர் பாதல் நஞ்சுண்டசாமி.

ஓவியரான இவர் நடிகை ரம்யாவின் தீவிர ரசிகர் ஆவார். இப்புகைப்படத்தை நடிகை ரம்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….