நான் சம்பாதிச்ச மொத்த பணத்தையும் என் அப்பா அதுல விட்டுட்டாரு.. கசப்பான சம்பவம் குறித்து பேசிய நீலிமா ராணி..

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை நீலிமா ராணி. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார். அதில் மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இதனிடையே 21 வயதில் துணை நடிகராக இருந்த இசைவாணன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சீரியலில் இருந்து விலகி இருக்கும் நீலிமா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

   

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நீலிமா தன்னுடைய வாழ்வில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அதாவது தான் சீரியல்களில் நடித்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்த போது அதை அப்பாவிடம் அப்படியே கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மொத்த பணத்தையும் இழந்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் கையில் எதுவுமே இல்லாத நிலையில் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். அதன் பிறகு தைரியத்துடன் வாடகை வீட்டில் குடியேறி வைராக்கியத்துடன் சம்பாதித்து தான் வாடகைக்கு இருந்த வீட்டையே வாங்கியதாக நீலிமா கூறியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் தான் வாழ்வில் சந்தித்த தோல்விகளும் அதன் பிறகு இருந்த தைரியமும் தான் என நீலிமா வருத்தத்துடன் பேசி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Josh Talks தமிழ் இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@joshtalkstamil)

author avatar
Nanthini