நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.
தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை சில தினங்களுக்கு முன்னர் நெட்டிசன்கள் கண்டனர். இதையடுத்து விக்னேஷ் சிவனை, நயன்தாரா ‘அன்பாஃலோ’ செய்துவிட்டதாகவும் இருவருக்கும் பிரச்சனை என்றும் வதந்திகள் பரவின. ஆனால், அடுத்து அவரைப் பின் தொடர்ந்து வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
தற்பொழுது அவர் மீண்டும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் , “umm… I’m lost ” , ‘நான் இழந்துவிட்டேன் ‘ என சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் மீண்டும் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் மீண்டும் ஏதாவது பிரச்சினையை..? என்று கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். இதோ அந்த பதிவு…