நீச்சல் குளத்தில் கணவருடன் ஜாலி பண்ணும் நடிகை நயன்தாரா…  இரண்டு குழந்தைக்கு அம்மாங்குறத மறந்துட்டீங்களே…!

By Begam

Updated on:

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன் பிறகு காதலில் சிக்கிய இவர் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வந்தார்.

   

இதனிடையே இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சுமார் ஏழு ஆண்டுகள் காதல் ஜோடியாக கோலிவுட் திரை உலகில் வலம் வந்தனர். அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார்.திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறிய தகவலையும் வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்பொழுது  இருவரும் தங்களது குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களது குடும்பத்தில் கொண்டாடப்படும் அழகிய கொண்டாட்டங்கள் குறித்த பல புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் நயன்தாரா கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் நேரத்தை செலவிட மறப்பதில்லை. தற்பொழுது இவர் நீச்சல் குளத்தில் ஜாலியாக கணவர் விக்கியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…