தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் கேரியரில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது தேவர்மகன் திரைப்படம் தான். சினிமா படிப்பவர்களுக்கு அந்த திரைப்படம் ஒரு விக்கிபீடியாவாக திகழ்ந்து வருவதாக இயக்குனர் மிஷ்கின் பல பேட்டிகளில் கூறியுள்ளார். கமல்ஹாசனின் ஸ்கிரீன் ப்ளே, பரதனின் இயக்கம், இளையராஜாவின் இசை என படத்தில் அனைத்துமே சிறப்பாக அமைந்திருந்ததால் தேவர்மகன் காலம் கடந்த இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு மாஸ்டர் படமாக உள்ளது. தேவர் மகன் படத்தின் கதையை கமல்ஹாசன் வெறும் ஏழு நாட்களில் எழுதி முடித்து விட்டாராம்.

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 34 ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் ஒரு விவாத பொருளாக உள்ளது. தேவர் மகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கௌதமி மற்றும் ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ரேவதி நடித்த பஞ்சவர்ணம் கதாபாத்திரம் இன்றளவும் அவருக்கு ஒரு மைல்கல் கேரக்டராக அமைந்திருக்கிறது. குறிப்பாக கமல்ஹாசனுடன் அவர் ரொமான்ஸ் செய்யும் இஞ்சி இடுப்பழகி பாடல் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ரேவதி இல்லையாம். அதாவது அந்த கேரக்டரில் முதலில் நடிக்க நடிகை மீனா தான் கமிட்டாகி உள்ளார். அவரை வைத்து நான்கு நாட்கள் படபிடிப்போம் நடந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த கிராமத்து பெண் கதாபாத்திரம் செட் ஆகாததாலும் அவர் மிகவும் இளமையாக காட்சியளித்ததாலும் அவர் செட்டாக மாட்டார் என முடிவெடுத்த பட குழு, அவருக்கு பதில் நடிகைய ரேவதியை நடிக்க வைத்துள்ளனர். குறிப்பாக இஞ்சி இடுப்பழகி என்ற பாடலும் மீனாவுக்காக தான் எழுதப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் நாசர் ஒரு நிகழ்ச்சியில் கூட பேசி இருந்தார்.
