CINEMA
“ஆமா, என் கணவருக்கு அது இல்ல தான்… இருந்தாலும் எனக்கு பரவாயில்ல”.. மனம் திறந்த ரோஜா பட நடிகை..!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர்தான் நடிகை மதுபாலா. இவர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன் மற்றும் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இப்படி பிசியான நடிகையாக இருந்த இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அமையா மற்றும் கெயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மதுபாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் திரைத்துறைக்குள் நுழைந்தபோது கண்டிப்பாக ஒரு நடிகரை தான் திருமணம் செய்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் வந்தது. என்னுடைய கணவருக்கு பேண்டஸியாக காதலிக்க தெரியாது, ஆனால் காதலுக்கு அவர் உண்மையாகத்தான் இருப்பார்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் சண்டையிடும் போது நான் எல்லை மீறி பேசினாலும் கூட அவர் அதனை புரிந்து கொண்டு அமைதியாக அணுகுவார். அவருக்கு முடி இல்லாதது தாழ்வு மனப்பான்மையை அவருக்கு கொடுத்தது. என்னிடம் காதலை சொல்லும் போது கூட அவருக்கு முடி இல்லாமல் தான் இருந்தது. இருந்தாலும் அது எனக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை என்று மதுபாலா மனம் திறந்து பேசியுள்ளார்.