தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இந்த தொடர் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நடிகை VJ சித்ரா நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு நடிகை காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவரும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்பொழுது நடிகை லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவர் ஏற்கனவே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா உட்பட்ட சில விருதுகளையும் வந்திருக்கிறார் லாவண்யா. மாடலிங், நடிப்பு என பிசியாக இருக்கும் லாவண்யா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, ‘எனக்கு ரொம்பவே தெரிந்த ஒரு காஸ்டிங் இயக்குனர். ஒருமுறை என்னை காண்டெக்ட்டில் இருக்க சொன்னார். ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல சும்மா பேசும் காண்டெக்டாக இல்லை. அவனுடன் 6 மாதம் ஒன்றாக வாழ சொன்னான். அதுக்கு மேல் வேண்டாம் என்றான். அப்படி இருந்தால் நீ வேற லெவலுக்கு போய்டுவ. நான் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விட்டேன். ஏன்னா நான் அப்போது தான் வளர்ந்து வந்தேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை.’ என்று தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து மனம் கலங்கி பேசியுள்ளார் லாவண்யா.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…