CINEMA
மாரடைப்பால் உயிரிழந்த 24 வயது இளம் நடிகை… சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம்..!!
மலையாள சினிமாவில் காக்கா என்ற குறும்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை லஷ்மிகா சஜேவன். இதில் பஞ்சமி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில் கருமை நிறம் உள்ள பல் நீளமாக இருக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் .
அந்தப் படத்தில் இவரது தோற்றத்தால் குடும்ப உறுப்பினர்களால் கூட ஒதுக்கி வைக்கப்படும் நிலையில் அதையெல்லாம் நேர்மறையாக எடுத்துக் கொண்டு தைரியமாக எப்படி முன்னேறுகிறார் என்பதை இதன் கதை ஆகும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் இவர் பிரபலமானார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
நடிப்பை தாண்டி பேஷன் ஆக இருந்த இவர் சார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் மயங்கி விழுந்து இவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு தான் இவரது மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர். 24 வயதிலேயே இளம் நடிகை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.