#image_title
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் குஷ்பூ நடித்த கிழக்கு வாசல், சின்னத்தம்பி, நாட்டாமை, காத்திருக்க நேரமில்லை, கல்யாண கலாட்டா உள்ளிட்ட படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. அந்த காலகட்டத்தில் குஷ்பூ இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். சுமார் 16 வருடம் குஷ்பூ முன்னணி கதாநாயகியாக விளங்கினார். கடந்த 1988-ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, எஸ்.பி முத்துராமன், சுகாசினி, குஷ்பூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த நிலையில் குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டியில் தர்மத்தின் தலைவன் பட ஷூட்டிங்கில் நடைபெற்ற அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சுகாசினியை பார்த்தாலே அப்போது எல்லாம் பயமாக இருக்கும். அவங்க அப்படியே டீச்சர் மாதிரி இருப்பாங்க. முதலில் எனக்கு தெரிந்தது பிரபு மட்டும்தான். ரஜினிகாந்த் சார், சுஹாசினி என யாரையும் எனக்கு தெரியாது.
ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபு என் கன்னத்தை பிடித்து டயலாக் சொல்வது போல சீன் இருந்தது. திடீரென அவர் என் கன்னத்தைப் பிடித்து அப்படியே இட்லி மாதிரி இருக்கு என சொன்னார். யாருமே அதை எதிர்பார்க்கவே இல்லை. அன்றிலிருந்து குஷ்பூ இட்லி என சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதிலிருந்து தான் குஷ்பூ இட்லி, குஷ்பூ டீ, குஷ்பு கோவில் அப்படின்னு வளர்ந்து கொண்டே போச்சு. அதை ஆரம்பித்து வைத்தது பிரபு தான். இன்னைக்கு வரைக்கும் அது மாறவே இல்லை என பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…