53 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!

By Nanthini on செப்டம்பர் 3, 2024

Spread the love

தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பு. இவர் திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் உள்ளார்.

   

தென்னிந்திய திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக முதலில் அறிமுகமானார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

   

 

முதல் திரைப்படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.

அது மட்டுமல்லாமல் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் நிவர்த்தி திகழ்ந்தார். அதோடு ரசிகர்கள் இவர் மீது உள்ள பற்றின் காரணமாக இவருக்கு கோவில் ஒன்றும் கட்டி உள்ளனர்.

இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்தார். தற்போதும் இவர் படங்களில் குணச்சித்திர வேதங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.

சினிமாவில் பிஸியாக இருக்கும்போது 2000 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி யை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

அவருடைய இரண்டு மகள்களும் படித்து முடித்து விட்டு தங்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பூ அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது சேலையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுப்பாங்க போலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.