நண்பர்களுடன் செம ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்… என்னது அவுங்களுக்கு இத்தனை வயசா…?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.  இறுதியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

காதல், காமெடி மற்றும் கிராமத்து பெண் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியவர் கீர்த்தி சுரேஷ்.

இவருக்கு தென்னிந்திய சினிமா அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் கீர்த்தி சுரேஷ் . இவர் நேற்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது .

இதில் ப்ரீத்தி சஞ்சீவ், அட்லீ , அட்லீயின் மனைவி பிரியா அட்லீ, நடிகர் கதிர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.