Connect with us

CINEMA

குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் ஆன ‘கரகாட்டக்காரன்’ பட நடிகை கனகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கனகா. 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் 425 நாட்கள் திரையரங்கிள் ஓடி சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த இந்த ஒரே படத்தில் மிக பெரிய நடிகையாகி விட்டார் நடிகை கனகா. 1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது அம்மாவும் ஒரு நடிகத்தான்.

   

அவரது தாய் தேவிகா , சிவாஜி ,எம் ஜி ஆர் போன்ற நடிகர்களுடன் நடித்தவர். தனது தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவர் சினிமாவில் நுழைய சற்று சுலபமாக இருந்தது. ‘கரகாட்டகாரன்’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் என்று ஏகப்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த்,சரத் குமார் என்று பல நடிகர்களுடன் நடித்தாலும் இதுவரை கமலுடன் மட்டும் இவர் நடித்ததே இல்லை.

இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள கனகா 2000 ஆம் வருடம் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருந்தார்.  இவரது திருமண வாழ்க்கையும் சோகத்தில் தான் முடிந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே முத்து குமார் யார் என்றே தமக்கு தெரியாது என்று கனகா கூறியதாகவும் கூறப்படுகிறது.

இவர் பல ஆண்டுகளாக தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். அதனால் நடிகை கனகா மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் நடிகை கனகாவை சந்திக்க இருப்பதாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். தற்பொழுது அவர் கனகாவை அவர் இருக்கும் இடத்தில் சென்று சந்தித்தாகவும், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த புகைப்படத்தில் கனகா பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிபோயுள்ளார். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top