தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா, கிரிஜா நடித்த திரைப்படம் ‘கீதாஞ்சலி’. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழில் ’இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது . இந்த படத்தால் நடிகை கிரிஜாவுக்கு ரசிகர்கள் குவிந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கிரிஜா நடித்தார். 2003 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அங்கு அவர் பத்திரிகையாளராக பணியாற்றியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பற்றிய எந்த தகவல்களும் இணையத்தில் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்பொழுது அவரின் சமீபத்திய புகைப்படமும், அவரை பற்றிய தகவல்களும் நமக்கு தெரிந்துள்ளது. அதன்படி, இவர் தற்போது லண்டனில் மிகப்பெரிய எழுத்தாளராக பணியாற்றி வருவதாகவும், அங்குள்ள பிரபல பத்திரிகைக்கு கட்டுரை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் தற்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கம்பேக் கொடுத்திருக்கிறார்.
அதாவது, இவர் ‘இப்பனி டப்பிடா இலியாலி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், இதைத்தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.தற்பொழுது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…