தமிழில் 2000ல் வெளிவந்த பாளையத்து அம்மன் திரைப்படத்தில் நடித்து அசத்தியவர் நடிகை திவ்யா உன்னி. 1987ல் இருந்து படங்களில் நடித்து வரும் திவ்யா பெரும்பாலும் மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் தமிழில் பாளையத்தம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இத்திரைப்படத்தின் மூலம் நடிகை திவ்யா உன்னிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர். ஆனால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் 2002ல் சுதீர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2017 விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர்களுக்கு அருண் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். பின் கடந்த 2018 இல் அருண்குமார் என்பவரை நடிகை திவ்யா உன்னி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்றும் பிறந்தது.
இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை திவ்யா உன்னி. சமீபத்தில் இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு பாளையத்து அம்மன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டியளித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ ‘பாளையத்து அம்மன்’ திரைப்படத்தில் நடித்த நடிகையா இவர்? இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…