#image_title
பிரபல நடிகர் ஆன அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க தமிழரசின் மகனும் ஆவார். அருள்நிதி மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாது வசனம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி படம் ரிலீஸ் ஆனது. இப்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான டிமான்டி காலனி 2 படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த மாதம் 15 ஆம் தேதி டிமான்டி காலனி 2 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அருள்நிதி கூறியதாவது, டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தின் கதையை தொடர்ந்து இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனது. அதிலிருந்தே இரண்டாவது பாகம் எப்போது எடுக்கலாம் என அஜயிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எதுக்குமே பயப்பட மாட்டேன்.
தப்பு பண்ணா தான் பயப்படுவேன். இதுவரைக்கும் என்னோட படம் ரிலீஸ் ஆகும் போது தான் ரொம்ப பயமா இருக்கும். முதல் படத்திலிருந்து இப்போ வரைக்கும் அப்படித்தான். படம் ரிலீஸ் ஆகும் போது பயமாயிருக்கும். நான் நடிச்ச கழுவேத்தி மூர்க்கன் படம் 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த படம் நல்ல ஓடும்னு நினைச்சேன். ஆனா எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடல என பேசியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…