தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனிகா. இவர் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு இரண்டு முறை மகளாக நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.
இதைத் தொடர்ந்து பின் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இவர் தற்பொழுது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோவுடன் லிப் கிஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்த நடிகை அனிகா இதனால் சர்ச்சைகளிலும் சிக்கினார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் புட்டபம்மா என்ற திரைப்படம் வெளிவந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நடிகை அனிகா தனுஷ் இயக்கி நடிக்கும் 50 வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனிகா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது நடிகை வெள்ளை நிற சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…