நடிகர் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்து போனார். தமிழ் திரையுலகமே அவரது மறைவால் சோகத்தில் உள்ள நிலையில், அவரது இறப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள், அவரது நினைவிடத்திலும், இல்லத்திலும் சென்று அஞ்சலி செலுத்தி வருவதுடன், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். சமீபத்தில் விஜயகாந்திற்கு தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

#image_title
இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை அம்பிகா, கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், சினிமாவில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் உயிருடன் இருந்தப் போது கூட, தனது மகனுக்காக யாரிடமும் சிபாரிசு செய்ததில்லை. அப்படியிருக்க, நடிகர் விஜய்க்காக எப்படி விஜயகாந்த் ஒரு செந்தூரப் பாண்டியன் படத்தில் நடித்து அவரது திரைவாழ்க்கையை தூக்கி விட்டாரோ, அதேப் போல சண்முக பாண்டியனின் சினிமா வாழ்க்கையை, நடிகர் விஜய் தூக்கி விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

#image_title
அத்தோடு, சமீப காலமாக சினிமாவில் ஒரு ஹீரோ மட்டுமின்றி, பல ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கும் படங்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, சண்முக பாண்டியனுக்கு திரையுலகினர் வாய்ப்பு தர வேண்டும் எனவும், அதுவே நாம் விஜயகாந்திற்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என நடிகை அம்பிகா கேட்டுக் கொண்டுள்ளார். இதனை செய்வதன் மூலம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மிகவும் மகிழ்ச்சியடைவார் எனவும் அம்பிகா கூறியுள்ளார். திரையுலகில் விஜய் அடியெடுத்து வைத்தப் போது அவருக்கு பெருமளவில் வரவேற்பு இல்லை.

#image_title
அந்த நேரம், உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த், செந்தூரப்பாண்டியன் என்ற படத்தில் விஜய்க்காக கேமியோ ரோலில் நடித்ததன் மூலம், விஜய் சினிமா உலகில் முன்னேறத் தொடங்கினார். அதேப் போல, விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில், அவருகு பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயகுநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படி இந்த இரு குடும்பமும் ஒருவரை ஒருவர் திரையுலகில் வளர்த்து விட்டுக் கொண்டனர். அதனால் தான் விஜயகாந்தின் மறைவில் நேரடியாக கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் விஜய். இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் திரை வாழ்க்கையில் முன்னேற விஜய் உதவ வேண்டும் என அம்பிகா கோரிக்கை விடுத்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
