கடந்த 1999ம் ஆண்டில் வெளியான சேது படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிதா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அபிதா கூறியதாவது, பாலா சாரை எப்ப பார்த்தாலும் எனக்கு சேது படம் ஆடிசன் ஷூட்டிங் தான் ஞாபகத்துல வருது. நான் அப்போ படங்களில் சின்ன சின்ன கேரக்டர் பண்ணிட்டு இருக்கும்போது பாலா சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி வர சொன்னாங்க.
நான் நல்லா டிரஸ் பண்ணிட்டு ரொம்ப மேக்கப் போட்டுட்டு அங்கே போனேன். போன உடனே கையில ஒரு சோப்பை கொடுத்து மூஞ்சிய நல்லா கழுவிட்டு வான்னு டைரக்டர் சொன்னார். ஏன்னு கேட்டேன். என்னோட படத்துக்கு மேக்கப் வேணாம். நீங்க சாதாரணமா எப்படி இருப்பீங்களோ அப்படி இருந்தால் போதும்ன்னு சொல்லிட்டார். அப்பவே நினைத்தேன். பாலா சார் கிட்ட ஏதோ இருக்குதுன்னு.
என்னோட இன்ரோடக்சன் சாங்குல எனக்கு டான்ஸ் ஆட வரலே. என்னை எல்லார் முன்னாடியும் டைரக்டர் திட்டிட்டார். நான் பயங்கரமா அழுதுட்டேன். அப்போ என்ன சொன்னார் என்றால், உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். ஏன்னா நீ பெரிய ஆளா வரணும். உனக்கும் இது முதல் படம். எனக்கும் இது முதல் படம் அப்படீன்னு சொன்னார் என்று நடிகை அபிதா அந்த நேர்காணலில் சேது படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…