Connect with us

CINEMA

‘வின்னர் கைப்புள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விவேக்கா?…  ஏன் நடக்காம போச்சுனா? ‘- பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த சுந்தர் சி!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அவர் இயக்கத்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தான, சூரி மற்றும் யோகி பாபு என அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.

   

அப்படி அவர் படங்களில் நகைச்சுவையில் உச்சம் தொட்டது வின்னர் கைப்புள்ள காமெடி. அதுதான் வடிவேலுவும் சுந்தர் சியும் இணைந்து பணியாற்றிய முதல் படம். அந்த படத்தில் வடிவேலு கைப்புள்ளையாக அடித்த அலப்பறைக்கு வாய்விட்டு சிரிக்காத தமிழ் ரசிகர்களே இருக்க முடியாது. அதன் பின்னர் வடிவேலுவோடு இணைந்து பல படங்களில் பணியாற்றினார் சுந்தர் சி.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் வின்னர் படம் பற்றி பேசும்போது பலரும் அறியாத ஒரு ஆச்சர்யத் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “நான் இப்போது ஒரு தகவல் சொன்னா பலருக்கும் ஆச்சர்யமா இருக்கும். வின்னர் படத்தை எடுக்க நான் நினைத்த போது அந்த கைப்புள்ள பாத்திரத்தில் விவேக் சாரைதான் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன்.

ஆனால் அப்போது எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாடு இருந்தது. அதுவுமில்லாமல் ஏற்கனவே நான் விவேக்கோடு சில படங்களில் பணியாற்றியிருந்தேன். அதனால் புதுக் கூட்டணியாக இருக்கட்டுமே என வடிவேலு சாரிடம் சென்றேன். “ எனக் கூறியுள்ளார். இதே போல வடிவேலு நடிக்க இருந்த படிக்காதவன் படத்தில் விவேக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top