CINEMA
“வத்திக்குச்சி பத்திக்காதுடா” வாலி எழுதிய வரிகள்… ஷாக் ஆன ஏஆர் முருகதாஸ்… இதுதான் காரணமா…?
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தீனா. ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஏஆர் முருகதாஸ் இயக்கிய மூன்றாவது படம் தான் இது. ஆனால் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட் பாடல்களாக மாறியது. குறிப்பாக அஜித்துக்கு போடப்பட்ட Intro பாடல் வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடல் தாறுமாறு ஹிட் என்று சொல்லலாம்.
இந்த பாடல் வரிகளை வாலி தான் எழுதியிருப்பார். இந்த பாட்டிற்காக ஏஆர் முருகதாஸ் வாலியை போய் சந்தித்தபோது வாலி பாடலின் முதல் இரண்டு வரிகளான வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசற வரையில வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன ஏஆர் முருகதாஸ் அமைதியாக ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்துள்ளார். வாலியும் இரண்டு நிமிடங்கள் பொறுத்து விட்டு ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி இதற்காக தான் புதிய இயக்குனர்களுக்கு பாடல் எழுதக்கூடாது. வேண்டாம் என்றால் வரிகளை மாற்றப் போகிறேன் என கோபமாக பேசி உள்ளார்.
உடனே ஏஆர் முருகதாஸ் படம் முழுவதும் அஜித் வத்திக்குச்சியை வாயில் வைத்திருக்கும் காட்சி வரும் அது எப்படி உங்களுக்கு தெரிந்தது என கேட்டுள்ளார். அப்போது வாலி தான் ஏதாச்சையாக தான் சொன்னதாக கூறியுள்ளார். இப்படி எதார்த்தமாக வாலி எழுதிய பாடல் வரிகள் படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.