தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. இதனால் மழைநீர் அனைத்து இடங்களிலும் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்கிறது. அது மட்டுமல்லாமல் பல இடங்களில் வீடுகளுக்குள் உள்ளூர் வெள்ள நீர் புகுந்து விட்டதால் மக்கள் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மழை நீர் வடிகால் என ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு முடிச்சீங்களே, அது சென்னைக்கு தானா இல்லை சிங்கப்பூருக்கு செஞ்சீங்களா என கேட்டுள்ளார். நான் அண்ணா நகரில் தங்கி இருக்கிறேன் இங்கேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மற்ற இடங்களில் நிலைமை எப்படி இருக்கும். கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது மக்கள் எல்லோருக்கும் உதவினோம்.
ஆனால் தற்போது எட்டு வருடங்கள் கழித்து அதை விட மிகவும் மோசமான நிலை தான் வந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் விஷால் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க