நடிகர் விஜய், சங்கீதா திருமணம் பற்றி பேசும்போது பலரும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறிவருகின்றனர். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை இதுதான். கடந்த 1995ம் ஆண்டில் விஜய் பூவே உனக்காக படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது இலங்கையில் உள்ள பெரிய தொழிலதிபர் மகளும், லண்டனில் பட்டம் படித்தவருமான சங்கீதா சென்னைக்கு வருகிறார். அப்போது விஜயை அந்த படப்பிடிப்பில் அவரது ரசிகையாக சந்தித்து பேசுகிறார்.
அடுத்த ஆண்டும், சென்னை வரும்போது விஜயை சந்திக்கிறார். அப்போது அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா ஆகியோரை சந்திக்க வேண்டும் என்க, விஜய் ஓகே சொல்கிறார். அவரும் விஜய் பெற்றோரை போய் நேரில் சந்திக்கிறார். அதன்பிறகு சங்கீதா சென்னை வரும்போதெல்லாம் விஜய், அவர் பெற்றோரை சங்கீதா சந்திக்கிறார். அப்படி சந்திக்க ஒருமுறை வரும்போது, சங்கீதாவிடம், விஜயை திருமணம் செய்துக்கொள்ள சம்மதமா என எஸ்ஏசி, ஷோபா கேட்க, சங்கீதாவும் சம்மதம் சொல்கிறார். விஜயிடம் கேட்க, உங்களுக்கு விருப்பம் என்றால் எனக்கு சம்மதம் என்கிறார். அதுவரை விஜய், சங்கீதாவுக்குள் காதல் ஏற்படவில்லை,
அதன்பிறகு 1998ம் ஆண்டில் இறுதியில் லண்டனில் விஜய், சங்கீதா திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பிறகு 1999ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ல், சென்னையில் அவர்களது திருமணம், ராணி மெய்யம்மை ஹாலில் 2 நாட்கள் நடக்கிறது. நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடையிலான இந்த 9 மாதங்களில்தான் அவர்கள் பேசி, பேசி காதலிக்கின்றனர்.
மற்றபடி அதற்கு முன்பாக அவர்களுக்குள் காதல் என்ற விஷயம் இல்லை என்று கூறியிருக்கிறார் விஜய் அப்பா சந்திரசேகர். இந்த திருமண விழாவில் 2ம் நாளில் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் மேடையில் விஜய், சங்கீதா மாலை மாற்றிக்கொண்டனர். அங்கு வந்த 60 ஆயிரம் விஜய் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டுள்ளது.