#image_title
நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கடந்த 1995-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கட்டுமரக்காரன் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.
இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரபல காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து வெங்கல் ராவ் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல் ராவ் நடித்துள்ளார்.
இந்நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் கடந்த 2022- ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் வெங்கல் ராவ் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, நான் உங்கள் வெங்கல்ராவ் பேசுறேன். கை கால்கள் நடக்க முடியவில்லை.
வாய் பேச முடியவில்லை. சினிமா தொழிலாளர்களும், சினிமா நடிகர்களும் எனக்கு உதவி பண்ணுங்க. மாத்திரை வாங்க பணம் இல்லை. மருத்துவமனை போக முடியல. ரொம்ப கஷ்டப்படறேன். இதுக்கு மேல என்னால பேச முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் எனக்கு உதவி பண்ணுங்க. நன்றி வணக்கம் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…
அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், தெருநாய்கள் தாக்கியதில் ஆறு வயது சிறுமி ஒரு படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை…
மகாராஷ்டிர மாநிலம் பாலேவாடி-மாலுங்கே சாலையில் புதன்கிழமை இரவு 11:18 மணி அளவில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூர விபத்து ஒன்று நடந்துள்ளது.…