![kl - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/kl.jpg)
CINEMA
2 படம் நடிச்சா கூட இவ்ளோ வருமா தெரியல.. சீரியலுக்காக சினிமாவுக்கு Bye Bye சொல்லும் எதிர்நீச்சல் குணசேகரன்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எதிர்நீச்சல் கதை உருவாகிறது. இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது இறப்பிற்கு பிறகு எழுத்தாளர் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார். என்ன இருந்தாலும் அவரது நடிப்பு மாரிமுத்துவின் நடிப்பை போல இல்லை என சிலர் கூறி வந்தனர் எப்படி இருந்தாலும் இவருக்கென ஒரு தனித்துவமான நடிப்பு உள்ளது. ஒரு ஆண்டுக்கு வேல ராமமூர்த்தி கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் 8 முதல் 10 படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.
மதயானை கூட்டம் மூலம் தமிழ் சினிமாவில் வேலராமமூர்த்தி தனது பயணத்தை தொடங்கினார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல அற்புதமாக நடிப்பார். இப்போது எதிர்நீச்சல் சீரியலில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு நேரம் இல்லையாம். ஒரு நாள் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு 40,000 வரை சம்பளம் வாங்குகிறார் வேலராமமூர்த்தி.
இதுவரை நான்கு படங்களில் வாய்ப்பு வந்தும் அவரால் நடிக்க முடியவில்லை. ஐந்து படங்களில் சம்பாதிப்பதை குறைந்த நேரத்தில் 2 எபிசோடுகளில் வேலராமமூர்த்தி சம்பாதித்து விடுகிறார். வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் குறைந்த நேரத்திலேயே அவர் அதிகமாக சம்பாதிக்கிறார். இதனால் இனிவரும் காலங்களில் அவர் வெள்ளித்திரையில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.