Categories: சினிமா

என்ன பெரிய காசு..? நான் 5 பெண் குழந்தைகள படிக்க வைக்கிறேன்.. மனம் திறந்து பேசிய நடிகர் தாடி பாலாஜி..!

Spread the love

நடிகர் தாடி பாலாஜி ஒரு பேட்டியில் தான் ஐந்து பெண் குழந்தைகளை படிக்க வைப்பதாக கூறியிருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

90’ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் முன்னணி காமெடி நடிகர்களாக வளம் வந்த வடிவேலு, விவேக் ஆகியோர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கின்றார்.

அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பல சீசன்களாக நடுவராக இருந்து வந்தார். பின்னர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். இதன் மூலமாக தான் இவருக்கும் இவரது மனைவிக்கும் இருந்த பிரச்சனையே வெளியில் தெரியவந்தது .

அந்த நிகழ்ச்சியின் முடிவில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் தற்போது வரை இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பெரிதளவில் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத தாடி பாலாஜி சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் நடைபெற்ற நீர்ப்பந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலருக்கும் தனது கையால் உதவி பொருட்களை கொடுத்திருந்தார்.

மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இப்படி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறிய இருப்பதாவது தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களிடம் நான் உதவி செய்யாமல் இருப்பது கிடையாது. அதிலும் படிப்பதற்கு பணம் இல்லை என்று கேட்பவர்களுக்கு கட்டாயம் உதவி செய்து வருகிறேன்.

ஒருமுறை ஒரு அம்மா தன்னிடம் தன் குழந்தைக்கு பீஸ் கடை முடியவில்லை என்று உதவி கேட்டார் . நான் மறுநாளே அவருக்கு பீஸ் கட்டுவதற்கு தேவையான பணத்தை ரெடி பண்ணி கொடுத்தேன். நம் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்வோமோ அதில் கொஞ்சம் மற்ற குழந்தைகளுக்கு செய்வதில் தவறில்லை என்று கூறியிருந்தார். ஓபனாக சொல்ல வேண்டும் என்றால் நான் இதுவரை ஐந்து பெண் குழந்தைகளுக்கு பீஸ் கட்டி இருக்கின்றேன்.

மேலும் பல பெண் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருக்கின்றேன். அது என்னவோ தெரியவில்லை பெண் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

பார்த்தாலே பதறுதே..! தன்னை கடித்த பாம்பை பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்ற நபர்… தைரியத்தை பாராட்டு இணையவாசிகள்…!!

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம்  அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…

30 minutes ago

ஷாக்.! திடீரென தீப்பிடித்த ஆம்புலன்ஸ்… புதிதாக பிறந்த குழந்தை, மருத்துவர் உட்பட 2 பேர் பலி… குஜராத்தில் பயங்கர அதிர்ச்சி..!!

குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…

35 minutes ago

சூப்பரோ சூப்பர்..! “நலன் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சமையல் போட்டி.. பெண்களே வீடியோ எடுத்து உடனே அனுப்புங்க… வெளியானது அறிவிப்பு…!

நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…

44 minutes ago

BREAKING: தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே ஆண் சடலம்…. பெரும் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

46 minutes ago

மகளை கல்லூரிக்கு அழைத்துச் சென்ற தந்தை… எதிரே எமனாக வந்த லாரி… நொடி பொழுதில் தலை நசுங்கி துடிதுடித்து… பெரும் சோக சம்பவம்…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…

54 minutes ago

BREAKING: மீண்டும் புயல் சின்னம்… தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை…. வந்தது அலெர்ட்…!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…

1 மணி நேரம் ago