சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய நடிகர் சூர்யா…..கொண்டாட்டத்தில் சூர்யாவின் ரசிகர்கள் ….வைரலாகும் புகைப்படங்கள் இதோ ….

By Begam

Published on:

தமிழின் முன்ணனி நடிகர்களில் ஒருவரான சூர்யா நேற்று டெல்லியில் நடைபெற்ற 68 வது தேசிய விருது வழங்கும் விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் ஜூலை 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைக்கதை, சிறந்த படம் ஆகியவற்றின் கீழ் இப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

   

இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சூர்யா தன் குடும்பத்துடன் நேற்று டெல்லி சென்றார். இவ்விழாவில் விருதைப் பெறுவதற்காக  சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சென்று இருக்கிறார்கள். சூர்யா நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் அந்த விழாவுக்கு சென்று இருக்கிறார்.

தேசிய விருதினை பெற்ற நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது அவர் விழாவில் கலந்து கொண்டு விருது வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்…