#image_title
நடிகர் சூரி, சசிகுமார் நடிப்பில் நேற்று வெளியான கருடன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் முதல் நாள் கலெக்சன் அரண்மனை 4 திரைப்படத்தை விடக்குறைவு தான் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சூரி.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்துக் கொண்ட சூரி தொடர்ந்து இரண்டாவதாக ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் தான் கருடன். இந்த திரைப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான துரை செந்தில் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கருடன்.
இந்த திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், பிரகிடா, ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது .இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் சுந்தர் சி யின் அரண்மனை நான்கு திரைப்படம் வெளியானது.
தொடக்கத்தில் சுமாராக ஆரம்பிக்கப்பட்ட இப்படம் அதன்பிறகு நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து கோடை விடுமுறை என்பதாலும் அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த வருடத்தின் முதல் பிளாக் மாஸ்டர் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது அரண்மனை 4 திரைப்படம். இதைத்தொடர்ந்து சூரியன் கருடன் படத்தை அனைவரும் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.
நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது. சூரியன் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் 3 கோடியாக உள்ளது. ஆனால் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் 4.75 கோடி ஆகும்.
இதை வைத்து பார்க்கும் போது கருடனின் வசூல் சற்று குறைவுதான். ஆனால் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. நேற்று காலை காட்சிக்கு திரையரங்குகளில் 20% கூட்டம் நிறைந்திருந்தது. மதியம் காட்சிகளில் 30% மற்றும் இரவு காட்சிகளில் 40 சதவீதமாக இருந்தது. ரசிகர்களின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் வரும் நாட்களில் கருடன் நல்ல வரவேற்பை பெறும் என்றும் வசூல் வேட்டை நடத்தும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.
ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 34 வயது பெண்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…
சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…
தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…
சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…