பராசக்தி படத்தில் நிறைய சவால்கள் இருந்தது, அதற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு போராடினோம் – படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

By Elango on மார்கழி 19, 2025

Spread the love

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ரஜினிகாந்த் சொன்னதைப் போல சோதனையை சந்திச்சாதான் சாதனை என்பது பராசக்தி படம் எங்களுக்கு பல சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் அது சாதனையாக மாறும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு பராசக்தி படம் பல சவால்களை கொண்டது. அதை எல்லாம் கஷ்டப்பட்டு கடந்துதான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் இந்த கதையில் ஒரு டிகிரியே அவர் முடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் அவர் சொல்வதை மட்டும் கேட்டு நடித்தால் போதும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். இந்த கதை 1965 களில் நடக்கும் வரலாற்று பின்னணி கொண்டது என்பதால் இதற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.