Connect with us

CINEMA

கும்பகோணத்தில் பிறந்து அரசபரம்பரையில் மருமகனாக போகும் சித்தார்த் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்…

தமிழ் சினிமாவில் ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாய்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கொடுத்தது.  இதைத்தொடர்ந்து ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, அவள், அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை என்று ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். இந்த நிலையில், சித்தார் மற்றும் தெலுங்கு நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கூட இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

கார்த்தி நடிப்பில் வந்த காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த சைக்கோ படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ஹெய் சினாமிகா படம் வெளியானது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் சொந்த வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது முதலில் நடிகை  சுருதிஹாசன் உடன் காதல் வயப்பட்டார். பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இவரை அடுத்து நடிகை சமந்தாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதுமட்டுமின்றி நடிகர் சித்தார்த்த 2003 ஆம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு சித்தார்த்துக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தற்பொழுது இவருக்கும் நடிகை அதிதி ராவுடன் திருமணம் நடைபெற இருக்கிறது இவர்களுக்கு தெலுங்கு தேசத்தில் பிரசித்தி பெற்ற ஒரு வெங்கடாசலபதி கோயிலில் தான் சமீபத்தில் நிச்சயம் நடந்தது .அந்த கோவில் அதிதியின் கொள்ளு தாத்தா கோயிலாம். அவர் அந்த ஊரின் சிற்றரசராக இருந்தவராம். தற்பொழுது தெலுங்கு தேசத்தின் அதுவும் அரச பரம்பரை மருமகனாக போகிறார் சித்தார்த். நடிகை அதிதியும் 2009 ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2013 ஆம் ஆண்டு அவரை  விவாகரத்து செய்தார். இருவருக்குமே இது 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top