Categories: சினிமா

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

Spread the love

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த திரைப்படத்தை எட்டு தோட்டாக்கள் படம் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கின்றார் நடிகர் சித்தார்த்.

தமிழ் மட்டும் இல்லாமல் பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர் அதிக திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கள் இடத்தை பிடித்திருக்கின்றது. பாலிவுட்டில் ரன் தே பசந்தி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தெலுங்கில் பொம்மரில்லு என்ற திரைப்படத்தால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

நடிப்பு மீதான தனது ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சித்தா. இந்த திரைப்படம் பலரின் இதயங்களை வென்றிருந்தது. இப்போது தன்னுடைய 40 வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவீரன் என்ற வெற்றி படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பு எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த திரைப்படத்தை இயக்குகின்றார்.

இது குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது “உலகம் எங்கிலும் சினிமா பார்வையாளர்களின் இதயங்களை கவரும் வகையில் படங்களை கொடுக்கும் நம் திரை துறையின் இளம் நம்பிக்கையாளர்களுடன் இணைந்து பணி புரிவது மிகுந்த மகிழ்ச்சி. சித்தா படத்தின் மீது நிறைய அன்பு கொடுத்திருந்தனர். பார்வையாளர்களின் உணர்வுகளை ஈர்க்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை சித்தா படம் கொடுத்திருக்கின்றது.

சித்தா படத்திற்கு பிறகு பல கதைகளை நான் கேட்டேன். இருப்பினும் ஸ்ரீ கணேஷ் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சுவாரசியமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற அருண் விஷ்வாவின் தொலைநோக்குப் பார்வை என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் முதன்முறை சந்தித்த போது அவர் தயாரிப்பாளர் என்பதை தாண்டி நல்ல சினிமா மூலம் திரைத்துறையை உயர்த்த வேண்டும் என்கின்ற ஆர்வம் அவரிடத்தில் இருக்கின்றது” என்றார்

Mahalakshmi

Recent Posts

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

11 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

22 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

31 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

40 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

50 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

1 மணத்தியாலம் ago