Categories: சினிமா

இன்னைக்கு நான் சினிமாவில் இருக்க காரணமே சிம்பு தான்.. அவர் இல்லனா நான் இல்ல… மனம் திறந்த சந்தானம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி காமெடி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சந்தானம் விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய திறமையை பார்த்த நடிகர் சிம்பு தான் இலக்கிய மன்மதன் திரைப்படத்தில் சந்தானத்தை அறிமுகம் செய்து வைத்து சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அதன் பிறகு சந்தானம் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக அவர் மாறினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி மற்றும் ஆர்யா உள்ளிட்ட இளம் ஹீரோக்களின் படங்களில் சந்தானம் கண்டிப்பாக இருப்பார்.

குறிப்பாக சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்த சந்தானம் ஒரு கட்டத்தில் இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்படி அவர் நடிப்பில் வெளியான படங்களில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற படங்கள் தோல்வியை தான் தழுவியது. இப்படியான நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு விஷாலுடன் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தப் படத்தில் வரும் சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படியான நிலையில் சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிம்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணம் சிம்பு சார் தான். அவர் இல்லன்னா இன்னைக்கு சினிமா திரை உலகில் நான் கிடையாது. டிவி நிகழ்ச்சியில் இருக்கும் போது சிம்பு சார்தான் என்ன கூட்டிட்டு வந்து வல்லவன் படத்தில் பண்ண வச்சாரு. அதனைப் போலவே எஸ்.ஜே சூர்யா சாருடன் அன்பே ஆருயிரே திரைப்படத்தில் இருக்கு ஆனா இல்லை என்ற காமெடியையும் அவர்தான் பண்ண வச்சாரு.

அடுத்தடுத்து வல்லவன் உள்ளிட்ட படங்களில் சிம்பு சார் கூட இணைந்து நிறைய படங்களில் நடித்தேன். ஒரு கட்டத்தில் சிம்புவுடன் வானம் திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் டேட்டே கொடுக்க முடியல. நான் எப்போ நைட்ல ஃப்ரீயா இருப்பனோ அப்ப மட்டும் எனக்கான ஷூட்டிங் எடுப்பாங்க. நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் கூட நீ எங்க கூடவே வரிசையா படம் பண்ணிட்டு இருந்திருக்கலாம் ஏன் மொத்தமா அப்படி போயிட்ட என்று கேட்டுக்கொண்டே இருப்பார். இன்னைக்கு என்ன எங்க பார்த்தாலும் சிம்பு அப்படி தான் கேட்பார் என்று சந்தானம் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

13 seconds ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

8 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

12 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

17 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

30 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

36 minutes ago